search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஞ்சி அரசு பள்ளி"

    செஞ்சி அருகே அரசு பள்ளியில் இன்று காலை தண்ணீர் தொட்டியில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சிவராமன் (வயது 13). செஞ்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இன்று காலை சிவராமன் பள்ளிக்கு வந்தான்.

    இந்த அரசு பள்ளியில் தற்போது கழிவறை கட்டும் பணி மற்றும் கட்டிட வேலை நடந்து வருகிறது. கழிவறை கட்டுவதற்காக 10 அடி ஆழமுள்ள தொட்டி கட்டப்பட்டது. அதில் கட்டிட வேலை பணிக்காக தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை வைத்து முகம் கழுவுவதற்காக சிவராமன் குனிந்து ஒரு கப்பில் தண்ணீர் எடுத்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அந்த தொட்டிக்குள் தவறி விழுந்தான். தண்ணீரில் தத்தளித்த சிவராமன் காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டான்.

    சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி சிவராமன் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து செஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவன் சிவராமன் உடலை தொட்டியில் இருந்து வெளியே மீட்டனர். தகவல் அறிந்து அவனது பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர்களுக்கு செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து மாணவன் சிவராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த தொட்டி மூடப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×